நிலக்கோட்டையில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

நிலக்கோட்டையில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

நிலக்கோட்டையில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரை கோட்டை ஊராட்சி பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

குடிநீர் வழங்கியதாக கூறுகிறார்கள். குடிநீர் வழங்கப்படவில்லை. சாலை போட்டதாக சொல்லும் பகுதியில் சாலை இல்லை. போலி களத்தில் சொல்வதாக பெண்களும் குற்றச்சாட்டினர். தலைவர் துணைத் தலைவர் எந்த ஒரு அடிப்படை வசதியும் தற்போது வரை செய்து தரவில்லை என பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளத்தை முழுவதுமாக வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. இதற்கு தலைவர் துணைத் தலைவர் பதிலளித்தும் பொதுமக்கள் கேட்காமல் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story