ஆடு திருடு முயன்ற நபர் - தர்ம அடி கொடுத்த மக்கள்!

ஆடு திருடு முயன்ற நபர் - தர்ம அடி கொடுத்த மக்கள்!

ஆடு திருடு முயன்றவரை பிடித்த பொதுமக்கள் 

குடியாத்தம் அருகே ஆடு திருடு முயன்ற நபரை மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பகுதியில் ஆலியார் தெரு பகுதியில் சாலையோரம் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது டாட்டா சுமோவில் வந்த ஒரு நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடுகளை டாட்டோ சுமோவில் ஏற்றியுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் டாடா சுமோவை சுற்றி வளைத்து சுமோவில் இருந்த மூன்று ஆடுகளை மீட்டனர். மேலும் ஆடுகளை திருட முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களிடமிருந்து அவரை மீட்டனர்.மேலும் போலீசார் விசாரணையில் ஆட்டை திருட வந்தவர் பெயர் சுல்தான்(55) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காயம் அடைந்த சுல்தானை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story