குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல் 

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட நாவக்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story