நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை

பேருந்து

நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம்,வள்ளியூர் ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலிருந்து களக்காடு வழியாக நாகர்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், களக்காட்டிலிருந்து பணகுடிக்கு குறைவான தொலைவுள்ள திருக்குறுங்குடி, ராஜபுதூர், ரோஸ்மியாபுரம், பணகுடி வழித்தடத்தில் நீண்ட காலமாக ஓரிரு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கட்டணமும், பயண நேரமும் இந்த வழித்தடத்தில் குறைவதுடன், சாலை வசதியும் மேம்பட்டுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு ரோஸ்மியாபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story