குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

செக்காரப்பட்டியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, செக்காரப்பட்டி அருந்ததியர் தெருவில் இருந்து குப்புச்சிபாளையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இச்சாலையில் தினமும் எண்ணற்ற டிப்பர் லாரிகள், தனியார் பள்ளி பேருந்துகள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் என எந்நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. அவ்வாறு செல்லும் வாகனங்கள் சற்று வேகமாக சென்றால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பள்ளத்திற்குள் விழுந்து உடலில் காயங்கள் ஏற்பட்ட செல்லும் சம்பவம் அடிக்கடி இப்பகுதியில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. ஆகவே, இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story