சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியால் மக்கள் அச்சம்

சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியால் மக்கள் அச்சம்
சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியால் மக்கள் அச்சம்...
சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் 17வது வார்டில் பழைய சாட்சியாபுரம் ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. மேலும் இதே பகுதியில் பறையர் குளம்,ரேசன் கடை அமைந்துள்ளது.இங்கு வசிக்கும் மக்கள் நலன் கருதி சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் ஒரு மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு மின் கம்பிகள் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.இந்த மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் மிகவும் தாழ்வாக செல்கிறது.இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு,வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகின்றது.

எனவே,ஆபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story