மறியல் போராட்டத்திற்கு திரண்ட தேமுதிக.,வினர்

மறியல் போராட்டத்திற்கு திரண்ட தேமுதிக.,வினர்

  சூழாலில் சாலை பணிகள் துவங்க வலியுறுத்தி, தேமுதிக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சூழாலில் சாலை பணிகள் துவங்க வலியுறுத்தி, தேமுதிக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட சூழால் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரிக்குழி - வேங்க விளை சாலையில் தார்த்தளம் அமைக்க ரூபாய் 8 லட்சம் அனுமதிக்கப்பட்டுபட்டது. இதற்கு ஊராட்சி நிர்வாகம் கடந்த 5 மாதத்திற்கு முன் டெண்டர் விட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர் தரப்பு சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் கிளறிவிட்டு, ஆங்காங்கே ஜல்லி இறக்கி வைத்தது.

ஆனால் அடுத்த கட்ட பணிகள் தொடங்காமல் முடங்கிய நிலையில் காணப்பட்டது.இதனால் சாலையில் வாகனங்கள், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும அவதிப்பட்டனர். இதனை கண்டித்தும் உடனடியாக சாலை பணியை தொடங்க வலியுறுத்தியும் சூழால் சந்திப்பில் தேமுதிக சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அறிவிப்பை தொடர்ந்து சாலை பணி அவசரமாக தொடங்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story