வெள்ள நிவாரண பணிகளை மக்கள் பாராட்டியுள்ளனர்- சபாநாயகர் அப்பாவு

வெள்ள நிவாரண பணிகளை மக்கள் பாராட்டியுள்ளனர்- சபாநாயகர் அப்பாவு

வெள்ள நிவாரண பணிகளை மக்கள் பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.  

வெள்ள நிவாரண பணிகளை மக்கள் பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

கோவையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக சபாநாயகர் அப்பாவு விமானம் மூலம் கோவை வந்தார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று பள்ளி,கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது எனவும் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

சென்னையில் மழை வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி உள்ளனர் எனவும் மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி இருப்பதாக தெரிவித்தார்.வெள்ள நிவாரண பணிகளை பல பேர் குறைசொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சை படுத்துவதை போன்றது எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் அவரிடம் சொல்லி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Tags

Next Story