தொழுப்பேடில் மின்சார கட்டணம் கட்ட மக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை
மின் கட்டணம் செலுத்தும் பெண்
தொழுப்பேடு மின்வாரிய அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ள நேரத்தில் மின்சார கட்டணம் கட்ட பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் தொழுப்பேடு மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தில் மின் தடை காரணமாக அலுவலக முழுதும் இருளில் மூழ்கியது.
அலுவலக நேரத்தில் மின்சார கட்டணம் செலுத்த வந்த மின் நுகர்வோரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிறகு கட்டண பில் தருவதாக அதிகாரிகள் வசூல் செய்கின்றனர்.சில மின் பயனாளிகள் மின்சார வந்த பிறகு மின் கட்டணம் செலுத்தி விட்டு செல்லலாம் என காத்திருக்கின்றனர்.
மின்சார தட்டுப்பாடு மின்தடை மின்சார கட்டணம் கட்டுவதற்கு காத்திருக்க வேண்டிய அவல நிலை காலம் காலமாக தொடர்வது மக்களின் சாபக்கேடாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story