மழை வேண்டி இஸ்லாம் மக்கள் சிறப்பு தொழுகை

திண்டுக்கல் மாவட்டம் மருநூத்தில் மழை வேண்டி ஜமாத்தார்கள் இன்று மந்தை குளத்தில் சிறப்பு தொழுகை நடத்தி இறைவனிடம் துவா செய்தனர்.
கடுமையான வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாலும், விவசாயமும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாலும் மழை வேண்டி திண்டுக்கல் மாவட்டம் மருநூத்தில் ஜமாத்தார்கள் வெள்ளிக்கிழமையான இன்று மந்தை குளத்தில் சிறப்பு தொழுகை நடத்தி இறைவனிடம் துவா செய்தனர். இதில் ஜமாத் நிர்வாகிகள் ஜமால் முகமது, கனி என்ற உசேன் மீரா, சாதிக்அலி, சேக் இஸ்மாயில், ஜபருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story