ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் புகார்

ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் புகார்

நரிக்குறவ இன மக்கள்

மான் வேட்டையாடிய வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி தலைவர் தேவராஜ் மற்றும் அக்காலனியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனை சந்தித்து, தங்கள் காலனியைச் 2 பேரை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

ஆட்சியர் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story