சங்கரய்யாவிற்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

சங்கரய்யாவிற்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

சங்கரய்யாவிற்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்கள்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மறைந்த சுதந்திர போரட்ட வீரர் சங்கரய்யாவிற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் விருது பெற்றவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான சங்கரய்யா நேற்று, உடல்நலமின்றி இறந்தார்.

இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும். மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும் மாணவ, மாணவியர், பொதுநல ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, விடியல் பிரகாஷ், பாண்டியன், பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story