வள்ளல் அதியமான் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை

வள்ளல் அதியமான் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை

வள்ளல் அதியமான்

இன்று வள்ளல் அதிகமான பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருவதை எடுத்து அதியமான் கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில்,வள்ளல் அதியமான் சிலைக்கு அதியமான்கோட்டை பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி, வள்ளல் அதியமானின் பிறந்த நாள் அரசு விழா செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடந்தது.இந்த விழாவையொட்டி அதியமான்கோட்டை கிராம மக்கள் சார்பில் ஊர் தலைவர் காளி தலைமையில் வள்ளல் அதியமான் சிலைலக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மின்னல் சக்தி, சாக்கன் சர்மா, சுரேஷ், தேவகலையரங்கன், துரை விஜயன், குப்புசாமி,தமிழரசன், கரிகாலன், மார்கண்டன், மரிமுத்து, ஜோதிநாதன், மோகன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story