ஜமாபந்தி நிகழ்ச்சியில் 250 மனுக்கள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் 250 மனுக்கள்

ஜமாபந்தி

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு 2 நாள்களாக நடந்து வருகிறது. மூன்றாவது நாளான இன்று நிறைவடைகிறது.இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

மாவட்ட வழங்கல் அலுவலக உதவி அதிகாரி தாசில்தார் கண்ணன், விளவங்கோடு தாலுகா தாசில்தார் குமாரவேல், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இரண்டு நாள்களாக 250 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது ரேஷன் கார்டு தவறியவர்களுக்கு இரண்டரை ஆண்டுகளாக ரேஷன் கார்டு நகல் வழங்கப்படவில்லை பொதுமக்கள் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,இந்த நிலையில் ஜமாபந்தியில் கொடுத்த மனுவின் அடிப்படையில் ரேஷன் கார்டு நகல் வழங்கப்பட்டது.

Tags

Next Story