அரசுப் பேருந்தை மறித்து மக்கள் மறியல் போராட்டம் !

அரசுப் பேருந்தை மறித்து மக்கள் மறியல் போராட்டம் !

மறியல் போராட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த சிங்கிலிக்காம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அரசுப் பேருந்தை மறித்து அங்குள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த சிங்கிலிக்காம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அரசுப் பேருந்தை மறித்து அங்குள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அங்குள்ள பெண்களை கேட்டபோது, " இங்கு வரும் அரசு பேருந்துகள் பெண்களை ஓசி டிக்கெட் என்று கூறி நிறுத்தாமல் செல்கின்றனர். மேலும் ஒரு கர்ப்பிணி பெண் பஸ்ஸில் ஏற ஓடிச் சென்ற போதும், பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதால், அந்த பெண் கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதை வீடியோ எடுத்த ஒரு இளைஞரின் கைபேசியை பேருந்தின் நடத்துனர் வாங்கி உடைத்து விட்டார்" என்று கூறினர். இதையடுத்தே அந்த கிராம மக்கள் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கூம்பூர் சப் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இனி இந்த தவறு நடக்காது என்று கூறிய பிறகே பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

Tags

Next Story