குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

மேலபுலம் கிராமத்தில் இருந்து அவளூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தில் இருந்து அவளூர் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி பஸ்கள், லாரிகள், டிராக்டர், என்று தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் மழைநீர் சேதமடைந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்குகிறது.

இதனால் இந்த வழியாக மோட்டோர் சைக்கிளில் செல்வோரும், சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் பள்ளத்தில் சிக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தனியார் கம்பெனியில் பணி முடித்து வீடு திரும்புவோரும், விவசாய நிலங்களுக்கு மருந்து மூட்டைகள், விவசாய இடுபொருட்கள் எடுத்து செல்வோரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள மேலபுலம்- அவளூர் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story