நாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நாய்களின் அட்டகாசம் 

தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவுக்காக ஆட்டுக்குட்டி, கோழிகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் கலக்கம் அடைந்துள்ளனர்.
நத்தம் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் கூட்டம் கூட்டமாக சாலைகள், தெருக்களில் சுற்றி திரிகின்றன. இறைச்சி கடைகளில் கொட்டப்படும் கழிவுகளை சாப்பிட ஒன்றோடொன்று சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் மக்களை கடிக்க பாய்கின்றன. சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவுக்காக ஆட்டுக்குட்டி, கோழிகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story