சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்: அதிமுக வேட்பாளர்

சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்: அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி குறிப்பிட்டார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, மெட்டலா, முள்ளுகுறிச்சி, உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அங்கு தாளத்துக்கு ஏற்ப நடனமாடிய பெண்களுடன் வேட்பாளரும் நடனமாடி வாக்குகள் சேகரித்தார். மேலும் அங்கு ஒரு ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். இதனை தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மேலும் பேசியதாவது: 2011 முதல் 2021 வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடந்தது.

குழந்தை பிறப்பு முதல் மக்கள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்ட அதிமுக அரசின் அத்தனை திட்டங்களையும் திமுக அரசு இப்போது நிறுத்தி வைத்துள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் துவங்கி பின்னர் சத்துணவு திட்டம், காலனி திட்டம், பள்ளி செல்பவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், அம்மா உணவகம்,

அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் போன்ற திட்டம் கொ டுத்தது அதிமுக அரசு. ஆனால் இந்த திட்டங்களை நிறுத்திவிட்டு தற்போது உரிமைத்தொகை என ரூ.1000 கொடுக்கிறேன் என்கிறது திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் கொடுப்பதாக சொல்லியிருந்தது. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு குறைந்த அளவு பயனாளிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் என்கின்றனர். அதிமுக திருமணத்தின் போது தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை கொடுத்தது பெரியதா? படிக்கும் போது மாதம் ரூ.1000 கொடுப்பது பெரியதா ? என எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஏதாவது நல்ல திட்டங்கள் கொண்டுவந்துள்ளதா?

என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் தற்போது எங்கும் போதைப்பொருள் அதிகரித்து இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினரே இதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அவலநிலைதான் திமுக ஆட்சியில் நடந்து வருகிறது. இது மோஷமான சூழ்நிலை. எனவே தொகுதிக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்திட அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் கே. பி.எஸ். சரவணன், வழக்கறிஞர் கே.பி. எஸ். சுரேஷ்குமார், பேரூர் கழக செயலாளர்கள் செந்தில்குமார், மணிகண்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் காலாவதி, சாந்தி ராஜமாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விஷ்வா, மற்றும் கூட்டணி கட்சியின் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆர். கே. ராமலிங்கம், டி. எஸ். விஜய சரவணன் மேலும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய ,பேரூர் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story