குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்கள் அவதி

குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்கள் அவதி

  பள்ளிபாளையம் ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பள்ளிபாளையம் ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அடிக்கடி குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்காக, மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் முறையாக பொருத்தப்படாததால், ஆங்காங்கே குடிநீர் தேங்கி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது ..

Tags

Next Story