நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி

நாய் தொல்லையால்  பொதுமக்கள் அவதி
திருவேங்கடத்தில் நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டம்,திருவேங்கடத்தில் நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் பிரதான சாலையான திருவேங்கடம் கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருவேங்கடம் பேருந்து நிறுத்தத்தில் தினசரி அதிகளவில் மாணவர்கள் மாணவிகள் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி அதிகளவில் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு இடையூறாக திருவேங்கடம் மெயின் பஜார் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும்போது தெருநாய்கள் வாகனங்களுக்கு இடையே செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே திருவேங்கடம் பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story