மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

மழை 

ராணிப்பேட்டை வில்வரத்னா அரசு பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்தது. நேற்று மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில் மழை பெய்தது.

சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பெய்த இந்த மழை காரணமாக மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் வில்வ ரத்னா அரசு நிதியுதவி பெறும் பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.

பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளி பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story