சேதமடைந்து காணப்படும் சாலையால் மக்கள் அவதி!

சேதமடைந்து காணப்படும் சாலையால் மக்கள் அவதி!

 சேதமடைந்து காணப்படும் அண்ணாசாலை

சேதமடைந்து காணப்படும் சாலையால் மக்கள் அவதி!
பொன்னமராவதியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் அண்ணாசாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பொன்னமராவதி நகரின் முக்கிய சாலையாக விளங்கும் அண்ணா சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இச்சாலை காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த மாதம் ஆங்காங்கே தோண்டப்பட்டதால் சாலையில் ஆங்காங்கே மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ள வருகின்றனர். மேலும் சாலையில் போக்குவரத்து நெரிசலும் மிகுந்துகாணப்படுகிறது. அடிக்கடி இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்தும் நேரிடுகிறது. பேருந்துநிலையம், சந்தை செல்லும் முக்கிய சாலையான இச்சாலையில் தினந்தோறும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலையில் காணப்படும் தூசியினால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story