பெரம்பலூர் அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாமல் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாமல் பொதுமக்கள் அவதி

கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய்கள்

பெரம்பலூர் அருகே நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் கிடப்பில் கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒதியம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்காக தோண்டப்பட்ட கால்வாய் கட்டப்படாமல் நீண்ட நாட்களாககிடப்பில் போடப்பட்டு இருப்பதால், அப்பகுதியில் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள், முதல் பொதுமக்கள் வரை தங்களது வீடுகளுக்கு செல்லும் பாதை பகுதியில் தோண்டப்பட்ட கால்வாய்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு

இருப்பதால் அப்பகுதி வாழும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாமல் நீண்ட நாட்களாக பலகை மூலமாக நடைபாதை அமைத்து சென்று வருகின்றனர். இதில் வயதான முதியவர்கள், குழந்தைகள் என பலகையில் செல்லும் பொழுது தடுமாறி கழிவு நீர் கால்வாய் தோண்டப்பட்ட கால்வாயில் விழும் அபாய நிலை உள்ளது.

இதனை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மக்கள்கோரிக்கை வைத்தனர் அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒரு தனி நபர் குடும்பங்கள் மட்டும் கழிவுநீர் கால்வாய்கள் செல்ல கால்வாய் எடுப்பதற்கு தடையாக இருப்பதால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story