விழுப்புரத்தில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்து கேட்பு

விழுப்புரத்தில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்து கேட்பு

மக்களிடம் கருத்து கேட்பு

பா.ஜனதா கட்சியின் சார்பில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியின் சார்பில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை பெறும் வகையில், மண்டலம் வாரியாக தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து பொதுமக்களிடம் படி வத்தை வழங்கி அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பொது மக்களிடம் படிவம் வழங்கப்பட்டு, அதில் தங்கள் பகுதிக்கான தேவை, என்ன குறை உள்ளது போன்ற கருத்துகள் பெறப்பட்டன. இதை பொதுமக்கள் தேர்தல் அறிக்கை பெட்டியில் செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கலி வரதன் கலந்துகொண்டு, மனுக்கள் பெறுதலை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story