பொது இடத்தில் மது அருந்தியவர்கள் கைது

பொது இடத்தில் மது அருந்தியவர்கள் கைது
பைல் படம்
இரணியல் அருகே பொது இடத்தில் மது அருந்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், தலைமையிலான போலீசார் நேற்று இரணியல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு டாஸ்மாக் கடையிலிருந்து மது வாங்கி பொது வழியில் அமர்ந்து மது அருந்திய சரவணன் (32), மிக்கேல் கிறிஸ்துராஜ் ( 36) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பொது வழியில் மது அருந்தியது உறுதியானது. இதையடுத்து அவர்களிடம் இருந்த மதுவை பறிமுதல் செய்த போலீசார் குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மது போதையில் இருந்ததற்கான சான்று பெற்று, இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இரண்டு பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story