பஜார் வீதியில் ரவுடித்தனம் செய்த நபர்கள் கைது

பஜார் வீதியில் ரவுடித்தனம் செய்த நபர்கள் கைது

பஜார் வீதியில் ரவுடித்தனம் செய்த நபர்கள் கைது

பொதுமக்களின் புகாரை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் பஜார் வீதியில் ரவுடித்தனம் செய்து தெரிந்த இரண்டு நபர்களை சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். புதுப்பாளையம் பஜார் வீதியில் கடை வியாபாரிகளை மிரட்டியும் கடையில் உள்ள பொருட்களை சாலையில் எடுத்து வீசியும் அந்த வழியாக வந்த பேருந்துகள் உள்ளிட்டவைகளை அடித்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுப்பாளையம் போலீசார் மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார்(24) என்பவரை நேற்று புதுப்பாளையம் போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் தொடர்புடைய கைதானவர்களின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story