பாஜகவையும், ஆளுநரையும் மக்கள் துடைத்து எறிவார்கள்: எம்பி

பாஜகவையும், ஆளுநரையும் மக்கள் துடைத்து எறிவார்கள்: எம்பி

சு. வெங்கடேசன் எம்பி

வெள்ளத்தை துடைத்து எடுத்து போல பாஜகவையும், அதன் அமைச்சர் மற்றும் தமிழக ஆளுநரையும் விரைவில் தமிழக மக்கள் துடைத்து எறிவார்கள், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி மற்றும் அய்யாப்பட்டி விலக்கு ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்களை மக்களின் பயன்பாட்டிற்காக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கான நிவாரண தொகை குறித்து, பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலுவுடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சென்று மத்திய உள்துறை அமைச்சரிடம் மூன்று முறை வலியுறுத்திய நிலையில், 27ஆம் தேதி நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தில், எப்படி வெள்ள பாதிப்பை துடைத்து எடுத்தார்களோ, அதுபோல பாஜக அரசியலையும், அதன் அமைச்சர்களையும், தமிழக மக்கள் விரைவில் துடைத்து எடுப்பார்கள் அதற்கு தமிழக ஆளுநரும் விதிவிலக்கு அல்ல என்று அப்போது தெரிவித்தார்....

Tags

Next Story