பல அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் !!

பல அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் !!

 போராட்டம்

தாளவாடியில் பல அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தாளவாடியில் பல அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம். ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாற்று திறனாளிகள் 100 க்கும் மேற்பட்டோர்,வட்டார போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத்தலைவர் நம்புராஜ், மாவட்ட பொறுப்பாளர் ராஜு, தாளவாடி ஒன்றிய செயலாளர் நசீர் பேக் ஆகியோர் தலைமையில் ஒன்றினைந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டுமெனவும், மேலும் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தயும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதாக கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story