வாக்களிப்பு விழிப்புணர்வு செய்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர்

வாக்களிப்பு விழிப்புணர்வு செய்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர்

வாக்களிப்பு விழிப்புணர்வு

100% வாக்குப்பதிவு குறித்து தகடுர் நற்பணி மன்றம் மற்றும் மகாத்மா காந்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் தகடூர் நற்பணி மன்றம் மற்றும் மகாத்மா காந்தி மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட வேண்டுமென்ற நோக்கில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இதில் மகாத்மா காந்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் சுரேஷ், தகடூர் மன்றத்தின் நிறுவனர் தகடூர் பிறைசூடன் மற்றும் அதன் நிர்வாகிகளான ரஞ்சித் குமார், ரத்னவேல், சந்தோஷ் குமார், ராஜ்குமார், மாணிக்கம், சிவ ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story