பூதலூரில் மாற்றுத்திறனாளிகள்  கோரிக்கை மனு

பூதலூரில் மாற்றுத்திறனாளிகள்   கோரிக்கை மனு

மனு அளித்த மாற்றுத்திறனாளிகள்

நூறுநாள் வேலை கேட்டு, பூதலூரில் மாற்றுத்திறனாளிகள்  கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் , பூதலூர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு, ஒரத்தூர் ஆர்.பூசைமணி தலைமையில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் முன்னிலையில்,

பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அறிவானந்தம் வசம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், பூதலூர் ஒன்றியம் ஒரத்தூர், மாரனேரி, மேகளத்தூர், பவனமங்கலம், செய்யாமங்கலம், செங்கிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இருந்து 20 பெண்கள் உள்பட 44 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story