திருப்பத்துர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

திருப்பத்துர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

மனுக்களை பெற்ற ஆட்சியர்

திருப்பத்தூரில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது அதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த‌ தர்ப்பகராஜ் திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்காவது மாவட்ட ஆட்சியராக இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முதல் மனுவை பெற்றார்.

Tags

Next Story