மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   

 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.01.2024) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 252 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) புஹாரி, அனைத்துதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story