குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (12.02.2024) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 290 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) புகாரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குழந்தை சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story