திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்


திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 246 மனுக்கள் பெறப்பட்டது மாவட்ட ஆட்சியர் தகவல். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் . இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story