நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம்


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ5,500/- வீதம் மொத்தம் ரூ.22,000/- மதிப்பீட்டில் இலவச பித்தளை தேய்ப்புபெட்டியினையும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,13,544/- மதிப்பீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் முதிர்வு தொகையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு நவீன காதொலி கருவியினையும் இயக்க குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story