எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

குறைதீர் கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் மனு அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 4பேர், புதிதாக 37 மனுதாரர்கள் என மொத்தம் 41 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story