நெல்லை மாநகர காவல் துறையின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

X
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் காவல் ஆணையர் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் காவல் ஆணையர் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. அதன்படி திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற முகாமில் காவல் ஆணையர் பா.மூர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். 23 பேர் மனு அளித்தனர். அவை மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
