காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில், மொத்தம் 63 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story