கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைதீர்வு கூட்டம் எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில் நேற்று நடந்தது.

பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அத்துடன் ஏற்கனவே பெறப்பட்ட 12 மனுக்களில் 10 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த பரிந்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் மகேஷ், மனோஜ்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags

Next Story