மக்கள் நீதி மய்யம் புகார்: மின்கம்பம் சீரமைப்பு

மக்கள் நீதி மய்யம் புகார்: மின்கம்பம் சீரமைப்பு

சீரமைக்கப்பட்ட  மின்கம்பம்

மக்கள் நீதி மய்யம் புகாரை ஏற்று மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் உள்ள மின் கம்பம் பல ஆண்டுகளாக சேதமடைந்து, எந்நேரமும் சாய்ந்து விடும் நிலையில் இருந்தது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், மின்வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் மனு கொடுத்தனர்.

மின்வாரிய அதிகாரிகள் ஆகிக்கொண்டே இருந்தனரே தவிர, கம்பம் மாற்றப்படவில்லை. இந்த கம்பம் நேற்று நடந்த மின்வாரிய மின் பராமரிப்பு பணிகளில் ஒன்றாக, கம்பத்தை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

இதனால் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சித்ரா, விமலா, மல்லிகா உள்பட பலர், மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story