வேலி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வேலி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை

சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி உருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரா் வேலி' பிறந்த நாளை முன்னிட்டு, அரசு சாா்பில் நடைபெற்ற விழாவில் அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், கத்தப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வாளுக்கு வேலி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கூறியதாவது: 200 ஆண்டுகளுக்கு முன்னதாக, நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை வெளிக் கொணருகிற வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுவதுமாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி புகழை உலகுக்கு பறைசாற்றுகிற வகையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளாா் என பேசினார்

Tags

Next Story