பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு

வேட்பாளர் அறிமுக கூட்டம் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

அதிமுக,தேமுதிக,எஸ்டிபிஐ. புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,

முன்னால் எம்பியுமான ப.குமார் முன்னிலையில், லால்குடி தொகுதி நடராஜபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லால்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் லால்குடி நகர செயலாளர்,பூவாளூர் பேரூர் கழக,செயலாளர்,புள்ளம்பாடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள்,

புள்ளம்பாடி மற்றும் கல்லக்குடி பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு வேட்பாளர் சந்திரமோகனை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story