பெரம்பலூர் மாவட்ட சிஐடியு நிதியளிப்பு பேரவை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட சிஐடியு நிதியளிப்பு பேரவை கூட்டம்

சிறப்பு பேரவை கூட்டம் 

சிஐடியு சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கடமைகள் மற்றும் தேர்தல் நிதி அளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட சி ஐ டி யு சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கடமைகள் மற்றும் தேர்தல் நிதி அளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது,

சிஐ டி யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிஐடியு தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் அவரது பங்களிப்புகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

மேலும் தேர்தலுக்கான நிதிகளை மாவட்டத் தலைவர் ரெங்க நாதனிடம் வழங்கினார்கள், இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story