பெரம்பலூர் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

பெரம்பலூர் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

 வாக்கு சேகரிப்பு 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதி பாஜக கூட்டணி கட்சியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூனாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தரிசனம் செய்த பின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப் போது அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அய்யம்பாளையம், திருவெள்ளறை, திருப்பைஞ்சீலி, சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாரிவேந்தர் சென்று பொதுமக்களி டம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சி செய்து வரும் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அவரது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது.என்னை மீண்டும் எம்பியாக தேர்ந்தெடுத்தால் 1500 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். மேலும் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வழங்கப்படும்.தாமரையைத்தவிர வேறு எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும், அது பயனற்றது என அவர் பேசினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் , ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன் திருச்சி மாவட்டதலைவர் செல்வகுமார் மற்றும் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க.. அ.ம.மு.க. உள் ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story