காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

கொடி அணிவகுப்பு

குன்னத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில், அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிப்பது உறுதி செய்யும் வகையில், மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் பெரம்பலூர் பழனிச்சாமி மங்களமேடு தனசேகர் மங்களமேடு உட்கோட்டம் மற்றும் மத்திய சேமக்காவல் படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதக்கரா தருவா மற்றும் துணைக்காவல் கண்காணிப்பளார் ஹேம்ராம் மற்றும் காவலர்கள் பலர் கலந்துகொண்டனர் .

Tags

Next Story