பெரம்பலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.

பெரம்பலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி பணிப் புறக்கணித்துஅலுவலக வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி பணிப் புறக்கணித்துஅலுவலக வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு செய்து, பிப்ரவரி 26 ஆம் தேதி பகல் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்சியர் அலுவலக வாயிலில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதே கோரிக்கை வலியுறுத்தி பிப்ரவரி 27ஆம் தேதி இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமரிஅனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story