களத்தில் இறங்கிய பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார்..... தீவிர வாக்குச் சேகரிப்பு

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டப்பேரவை உறுப்பினர் பிரச்சாரம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக ச.முரசொலி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சேதுபாவாசத்திரம், மருங்கப்பள்ளம், நாடியம், வாத்தலைக்காடு, ஆண்டிக்காடு, சோலைக்காடு, விளங்குளம், செந்தலைப்பட்டினம், குப்பத்தேவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில், பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்டனர். நிகழ்வில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story