மீனவமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய பேராவூரணி எம்எல்ஏ 

மீனவமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய பேராவூரணி எம்எல்ஏ 
மீனவர் பொங்கல் 
மீனவமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் பேராவூரணி எம்எல்ஏ கொண்டாடினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை காலை 12 மணிக்கு நடைபெற்றது.

இதில், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் முன்னிலை வகித்தார். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், மீனவப் பெண்கள், கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருவதற்கும், பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்கியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதில், கள்ளிவயல் விசைப்படகு சங்க தலைவர் இப்ராஹிம், நாட்டுப்புற சங்க தலைவர் சையது முகமது, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், முன்னாள் டாப்கோ பெட் இயக்குனர் அபுதாகிர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பஷீர், சின்னையன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சர்புதீன், நீலகண்ணன், முன்னாள் நாட்டுப்படகு சங்க தலைவர் ராபிக், ஊராட்சி மன்ற உறுப்பினர் நூருல் அமீன், நாட்டுப்படகு சங்க செயலாளர் மன்சூர் இலாஹி மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story