பேராவூரணி அரசுப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் முப்பெரும் விழா

பேராவூரணி அரசுப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா வட்டாரக் கல்வி அலுவலர் க.கலாராணி தலைமையில் நடைபெற்றது.

வட்டாட்சியர் ரா.தெய்வானை, வட்டார வளமைய ஏற்பார்மையாளர் அ.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாநில நல்லாசிரியர் அ.காஜா முகைதீன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை ச.சித்ரா தேவி ஆண்டறிக்கை வாசித்தார்.

துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா பாருக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ.கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சி.ஜசிரா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். நிறைவாக ஆசிரியர் பெ.ரேணுகா நன்றி கூறினார்.

நிகழ்வில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story