பூம்புகார் தொகுதியில் பெரியார் நினைவு தினம்

பூம்புகார் தொகுதியில் பெரியார் நினைவு தினம்

தந்தை பெரியார் நினைவு நாள் 

பூம்புகாரில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் திமுகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 50 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில்,திமுகவினர் செம்பனார்கோயில் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன் ஒன்றிய செயலாளர்கள், அன்பழகன், மாலிக், மற்றும் தஞ்சை மண்டல தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story